(லியோ நிரோஷ தர்ஷன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேனின் ஆரம்ப உரையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் உயர்மட்டக் குழுவினர் எவரும் பங்கேற்காத நிலையில் , ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவே கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்ளார்.
செவ்வாய் கிழமை ஆரம்பிக்கப்படும் கூட்ட தொடர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க இலங்கையின் சார்பில் மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளதுடன் உறுப்பு நாடுகளினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM