நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை 2 வாரங்களின் பின்னர் கண்டுகொள்ளலாம் - பேராசிரியர் அர்ஜுன த சில்வா

Published By: Digital Desk 4

23 Aug, 2021 | 04:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்திய சில தினங்களிலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தடவையாக குறைவடையவில்லை என யாரும் சங்கடப்படவோ மனதளவில் பாதிக்கப்படவோ தேவையில்லை.

நாட்டை முடக்கியதன் பிரதிபலனை கண்டுகொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது செல்லும் என ராகம வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார். 

இலங்கையில் 3 இலட்சத்தைக் கடந்தது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை |  Virakesari.lk

அத்துடன் கொவிட் தடுப்பூசியை தெரிவுசெய்துகொண்டிருக்காமல் முதலில் கிடைக்கும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என நினைத்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முடக்கப்பட்டுள்ளபோதும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என பலரும் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் மக்கள் தேவையாற்ற பயணங்களில் இருந்து தவிரந்து, தங்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அனைவரும் தற்போதுள்ள நிலைமையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொவிட் தொற்றாளர்கள் குறையவில்லை என யாரும் சங்கடப்படவோ அதுதொடர்பில் சிந்திக்கவோ தேவையில்லை. இந்த காலப்பகுதியில்  இனம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்டுப்பாடற்ற பயணங்களின் பெறுபேறாகும்.

தற்போது நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் பெறுபேற்றை இன்னும் இரண்டு வாரங்களில் கண்டுகொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54