(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் வைத்தியசாலைகளில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு பொறுப்பாக செயற்பட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, களுத்துறை வைத்தியசாலை, ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் பாணந்துறை வைத்தியசாலை ஆகியவற்றின் தகவல்கள் தொடர்பில் தேடிப் பார்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவே பொறுப்பாக இவ்வாறு பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.
கொவிட் நிலைமையால் உயிரிழப்போரின் சடலங்கள் மேல் மாகாண வைத்தியசாலைகளில் ஆங்காங்கே கிடப்பதாக தகவல்கள் வெளியானபோதும் அவை பொய்யானது என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், வைத்தியசாலைகளின் பொலிஸ் காவலரண் அதிகாரிகள் ஊடாக இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதர்காக குறித்த பொலிஸ் அத்தியட்சரை நியமித்துள்ளதாக கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM