மாத்தளை புதிய மாவட்ட காரியாலயம் (கச்சேரி) தொடர்பிலான கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அத்திபாரம் அமைக்க வெட்டப்பட்ட குழியில் இருந்து 149 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இது குறித்து மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுஹந்தபாலவின் மேற்பார்வையில் மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அபேயசுந்தரவின் கீழான சிறப்புக் குழுவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அத்திபாரம் இடுவதற்கான குழிகள் வெட்டும் பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து அது தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட இந்த துப்பாக்கிகள் அனைத்தும் துருப்பிடித்து உக்கிப் போகியிருந்த நிலையில் அவற்றை மாத்தளை நீதிவான் எஸ்.பி.எச்.எம். சேசிரி ஹேரத் ஸ்தலத்துக்கு சென்று அவதனித்தார். நீதிவானின் உத்தரவுக்கு அமைய நேற்று அந்த ஆயுதங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட ஆயுத தொகைகளில் தனி குழல் துப்பாக்கிகள் 137, இரட்டைக் குழல் துப்பாக்கிகள் 6 மற்றும் 6 ரிவோல்வர் பாகங்களும் இருந்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
முன்னதாக மாத்தளை வைத்தியசாலையின் கட்டட அமைப்புக்காக இவ்வாறு அத்திவார குழிகள் தோண்டப்படும் போது பல வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் மனித எலும்புக் கூடுகள் பல மீட்கப்பட்டன. அது தொடர்பில் விசாரணை இன்னும் நிறைவுறாத நிலையில், நேற்று மாத்தளை புதிய கச்சேரிக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் நேற்று மீட்கப்பட்ட ஆயுத தொகை எந்த விதத்திலும் புராண வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல் பொருளாக இருக்க வாய்ப்பே இல்லை என விசாரணைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற கலவரத்தின் போதும் 1988–1989 ஆம் ஆண்டுகளின் கலவரத்தின் போதும் மாத்தளை மாவட்டத்தில் கடுமையான மோதல்கள் பதிவாகியிருந்தன.
இந்த இரு கலவரங்களின் போதும் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் அரச நிறுவனங்களுக்கும் ஆயுதங்களைக் கையளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களா இவ்வாறு மீட்கப்பட்டவை என்பது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM