(இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் இன்று (21.08.2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களில் பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்ட 75 வென்டிலேடர் கருவிகள்,150 செயற்கை சுவாச கருவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கொவிட் கட்டுப்பாட்டுக்கு வலய நாடுகள் ஒத்துழைப்புடன்செயற்பட வேண்டும். பாகிஸ்தான் சார்க் கொவிட்-19 அவசர உதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியினை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய அவசியத்தை இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM