இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாகிஸ்தான் 

Published By: Digital Desk 3

21 Aug, 2021 | 10:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்  ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல்  உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் இன்று (21.08.2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில்  பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களில் பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்ட 75 வென்டிலேடர் கருவிகள்,150 செயற்கை சுவாச கருவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொவிட் கட்டுப்பாட்டுக்கு வலய நாடுகள்  ஒத்துழைப்புடன்செயற்பட வேண்டும். பாகிஸ்தான்  சார்க் கொவிட்-19 அவசர  உதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியினை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய அவசியத்தை இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47