கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது

Published By: Digital Desk 4

19 Aug, 2021 | 09:54 AM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்று தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் கருவி ஒன்றும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள...

2025-06-24 10:40:53
news-image

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக...

2025-06-24 10:27:52
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-06-24 10:19:44
news-image

யாழில் வீசிய பலத்த காற்றினால் 159...

2025-06-24 10:15:06
news-image

இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித...

2025-06-24 10:33:12
news-image

யாழ். திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி...

2025-06-24 10:00:59