சாதாரண அறிகுறிகள் தென்படும் போது உதாசீனப்படுத்த வேண்டாம்  - விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி

19 Aug, 2021 | 07:06 AM
image

(எம்.மனோசித்ரா)

சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பெருமளவான தொற்றாளர்களே ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுகின்றனர். 

தாம் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அறிந்திருக்காமை அல்லது சாதாரண அறிகுறிகள் தென்படும் போது அவற்றை உதாசீனப்படுத்தல் என்பவையே இதற்கான பிரதான காரணியாகும். 

எனவே சிறிதளவில் அறிகுறிகளை உடையவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மேல் மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களில் 40 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாக உள்ளனர். 

இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவோர் இந்த சிக்கலுக்கு முகங்கொடுக்கவில்லை.

சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களே இவ்வாறு ஒட்சிசன் தேவையுடையவர்களாகவுள்ளனர். 

இவ்வாறான தொற்றாளர்கள் சாதாரணமாக அறிகுறிகள் தென்படும் போது அதனை கவனத்தில் கொள்ளாமல் அன்றாட வேலைகளில் ஈடுபடுகின்றனர். சிலர் தாம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோம் என்பதை அறியாத நிலையிலும் இவ்வாறான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறானவர்கள் உடலில் ஒட்சிசன் அளவு முற்றாக குறைவடையும் நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். 

அதன் காரணமாகவே தீவிர நிலைமையை அடையும் வீதமும் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனடியாக மருத்துவர் ஒருவரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43