மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவெளி ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வீரர் ஒருவர் துப்பாகி சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மாவடி ஓடை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த ஆற்றில் சம்பவதினமான இன்று காலை சுமார் 7 மணியளவில் ஆற்றினுள் உழவு இயந்திரத்தை விட்டு சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட பின்னர் ஆற்றில் இருந்து தரைக்கு வரும் போது அவர்கள் மீது மாவடி ஓடை இராணுவ முகாமில் இருந்து சிவில் உடையில் வந்த இராணுவ வீரார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் துப்பாகிசூடு நடாத்திய அனுரகுமார என்ற இராணுவ வீரரை மாவடி ஓடை இராணுவமுகாமில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM