(எம்.மனோசித்ரா)
கொவிட் வைரஸ் தொற்று நாட்டில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போதுள்ள நிலைமையில் நாட்டை குறுகிய காலத்திற்கேனும் முடக்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற போதிலும் அதற்கான சாதகமான பதில் உரிய தரப்பினரால் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தொற்றின் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு வர்த்தக சங்கங்கள் பல தாமாக முன்வந்து குறுகிய காலத்திற்கு கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளன.
அதற்கமைய நேற்று முதல் நகர்புறங்களிலுள்ள, நகர் புறங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.

இதுவரையில் கேகாலை, கம்புருபிட்டி, கெகிராவ, பலாங்கொடை, எம்பிலிபிட்டி, கம்பஹா, அம்பலாங்கொட, பண்டாரவளை, அம்பலாந்தோட்டை, பெலியத்த, வேயங்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, மாத்தளை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதே போன்று ஹட்டன் உள்ளிட்ட மேலும் சில நகரங்களிலும் குறுகிய காலத்திற்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நகரசபையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM