(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தை இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியமே, ஆனால் தீர்மானம் எடுக்கும் சக்தியாக வைத்திய அதிகாரிகளே இருக்க வேண்டும்.
அவர்களை கொண்டே நிலைமைகளை கையாள வேண்டுமென ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.
எந்தவித அடிப்படையும் இல்லாது அரசாங்கம் அமைச்சரவையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.
பாராளுமன்றத்தில் (17) செவ்வாய்க்கிழமை, வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்,
அவர் மேலும் கூறுகையில்.
கொவிட் கட்டுப்பாட்டு குழுவில் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் பங்களிப்பு குறைவாகவே கிடைக்கின்றது.
ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டும் மக்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளில் ஆயுர்வேத மூலிகைகளை வர்க்க வேண்டும். தேசிய ஒற்றுமையை இந்த விடயத்தில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இன்று நாட்டில் மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களை பார்த்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது. உடனடியாக இந்த நிலைமைகளை தடுக்க வேண்டும்.
ஏனைய அனர்த்தங்களில் சகலரும் ஒன்றிணைய முடியும் ஆனால் இதில் அவ்வாறு ஒன்றிணைய முடியாது.
ஆகவே மக்களை தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் நாடகங்கள், விளையாட்டுக்களை மட்டுமே காட்டிக்கொண்டு இருக்காது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM