வவுனியாவில் இருவர் கொரோனாவுக்கு பலி

Published By: Digital Desk 4

16 Aug, 2021 | 11:22 AM
image

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

13 கொரோனா மரணங்கள்! - 1923 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் | Virakesari.lk

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி நேற்று (15.08) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்