யாழ்ப்பாணம் பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நேற்று நள்ளிரவு புகுந்தவர்கள் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் நள்ளிரவு 11.50 மணியளவில் இராணுவ இலக்க தகடுகள் பொருத்திய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை தரித்தவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட நான் அவ்விடத்திற்கு சென்ற போது . இராணுவ சீருடை தரித்தவர்கள் என்னுடனும் முரண்பட்டுக்கொண்டனர்.
உடனடியாக நான் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தேன். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் என தெரிவித்தார்.
இதேவேளை, பொன்னாலை மாட்டுவண்டி திடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொரோனா பெருந்தொற்று அபாயம் நிலவும் வேளையில் , அராலியில் இருந்து வந்தவர்களால் மாட்டு வண்டி சவாரி நடத்தப்பட்டது.
இதன் போது இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் 10 கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
அதன் பின்னணியிலேயே ஒரு தரப்பினரின் ஏவுதலில் இராணுவத்தினர் மற்றைய தரப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதாக அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM