மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: இறுக்கமாக்கப்படும் சில கட்டுப்பாடுகள்..!

Published By: J.G.Stephan

14 Aug, 2021 | 02:42 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்து காணப்படுவதனால் சில கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொது ஒன்று கூடல்கள் ஊடாகவே அதிகளவான தொற்றுக்கள் கொண்ட கொத்தணிகள் உருவாகின்றது. இதனால் ஆலய நிகழ்வுகள், திருமண வைபவங்கள், மரண சடங்குகள், வைபவங்கள் உட்பட ஏனைய நிகழ்வுகளிற்கு அதி உச்சமாக 15 பேர் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் புதிய சுற்று நிருபங்கள் நடைமுறைக்கு வரும்வரை இக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அதிகரித்து வருகின்ற கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தயாராக உள்ளதெனவும், தற்போது 4 விடுதிகளில் கொவிட் நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு கட்டில்கள் அதிகரிக்க வேண்டிள்ளதனால் மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையையும் எதிர்வரும் 16 ஆந் திகதி முதல் இணைத்துக்கொள்ளப்பட்டு கொவிட் நோயாளர்களுக்காக சிகிச்சைகள் அழிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதெனவும், அவசரமான அவசியமான நோயாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி.கே.கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49