அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்: திலும் அமுனுகம

Published By: Digital Desk 8

11 Aug, 2021 | 06:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் விபரம் இனி பாதுகாப்பு தரப்பினரால் பரிசீலிக்கப்படும்.

இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு சேவையாளர்களில் 285 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் களுத்துறையில் உள்ள சாரதி கல்லூரியில் சிகிச்சையளிக்கப்படும். எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கது. ஆகவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது போக்குவரத்து சேவையினை முழுமையாக முடக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை.  பொது போக்குவரத்து சேவையும் கொவிட் -19 வைரஸ் பரவலடைவதற்கு ஒரு காரணியாக உள்ளது என சுகாதார தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் அநாவசிய தேவைக்காக பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது நெருக்கடியான நிலை  ஏற்பட்டுள்ளது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ள முடியும். எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கது என சுகாதார தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52