(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் 700 கர்ப்பிணிகள் மற்றும் புதிதாக பிரசவம் இடம்பெற்ற தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெருமளவானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா, 19 கர்ப்பிணிகள் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்குச் செல்வோர் வீதம் அதிகரித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் கர்ப்பிணிகளின் உயிரிழப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க சகலரும் தாமதிக்காது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பது தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறது. இலங்கையில் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. ஆரம்பத்தில் சிக்கல் நிலையிலுள்ள கர்ப்பிணிகளுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு சகல கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதோடு, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 150,000 - 200,000 கர்ப்பிணிகள் உள்ளனர். ஆனால் இவர்களில் சுமார் 30,000 பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளமை கவலைக்குரியது. தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த தாய்மாரில் 75 வீதமானோர் நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதோடு, கனிசமானோர் எவ்வித நோயும் அற்ற இளம் கர்ப்பிணிகளும் ஆவர். எனவே சகல கர்ப்பிணிகளும் தாமதிக்காது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM