'ஒன்லைன்' மூலமாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள்

Published By: J.G.Stephan

11 Aug, 2021 | 03:41 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)
பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ் பத்திரங்களை 'ஒன்லைன்' மூலமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பதிவாளர் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பதிவாளர் திணைக்களமானது கடந்த 2 ஆம் திகதி முதல் இந்த ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். 

இந்த புதிய திட்டத்தின் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ் பத்திரங்கள் வழங்குவதன்  ஊடாக முறைக்கேடுகளை தவிர்க்கவும், துரித கதியில் சான்றிதழ் பிரதியை பெற்றுக்கொள்ளவும் முடியும் என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் குறித்து பொதுமக்க‍ள் அறிந்திருக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

1960 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை பதிவு ‍செய்யப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு, விவாகம் என 36 மில்லியன் சான்றிதழ் பத்திரங்கள் பதிவாளர் திணைக்களத்தின் மத்திய செயற்பாட்டு கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

இணையத்தளத்தின்  ஊடாக கட்டணத்தை செலுத்தி உங்களுக்குத் தேவையான சான்றிதழை பெற முடியும். இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் www.rgd.gov.lk  என்ற இணையத்தள முகவரிக்கு செல்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது 011 2889518 எனும் தொலைப்பேசி  இலக்கத்துக்கு தொடர்புகொண்டு ஒன்லைன் மூலமாக இந்த சேவையை ‍பெற்றுக்கொள்வற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29