'அமெரிக்காவிற்கு வழங்கப்படவில்லை' : உதய கம்மன்பில விளக்கம்..!

Published By: Digital Desk 8

11 Aug, 2021 | 12:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)


திருகோணமலை துறைமுகம், மற்றும் திருகோணமலை  எண்ணெய் குதங்களுக்கு சொந்தமான 33 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

 அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 

ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயற்படும் வசந்த சமரசிங்க திருகோணமலை துறைமுகம் மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்களுக்கு சொந்தமான 33 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது.

திருகோணமலை துறைமுகம், எண்ணெய் குதங்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு  ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்காவிற்கு வழங்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முடிந்தால் அமைச்சரவை பத்திரத்தின் பிரதியை பகிரங்கப்படுத்த வேண்டும்.

2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் திருகோணமலை எண்ணெய் குதங்கள் 35 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் 2038 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  நிறைவடையும். நாம் தற்போது 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உள்ளோம். என்பதை ஊழல் ஒழிப்பு அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க அறியாமல் கருத்துரைக்கிறார்.

மேலும், போலியான குற்றச்சாட்டுக்களை  முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியினரும், அவர்களுக்கு சார்பாக செயற்படும் அமைப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கும் காலம் தகுந்த பாடத்தை கற்பிக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16