வெடிகுண்டைப் போன்று வெடித்துச் சிதறும் டெல்டா - மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு

Published By: Digital Desk 4

10 Aug, 2021 | 09:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் டெல்டா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், நாளொன்றில் நூற்றுக்கும் அதிகளமான மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கும் அது தொடர்பில் தீவிரமாக கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த வேறு எவரும் மாகாண எல்லைகளை கடக்க முடியாது என்றவாறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதையும் , மரணங்கள் பதிவாகின்றமையையும் கட்டுப்படுத்த முடியாது.

எனவே சுகாதார கொள்ளளவை மீறி தொற்று மீண்டும் தீவிரமடைய முன்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் இரு வாரங்கள் மிகவும் தீர்க்கமானவையாகும் என்றும் அபாயம் மிக்க டெல்டா வைரஸ் வெடிகுண்டைப் போன்று வெடித்து சிதறக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார். 

' டெல்டா வரைஸ் என்பது வெடிகுண்டைப் போன்றதாகும். நியூயோர்க், லண்டன், இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் டெல்டா பாரியளவில் பரவி பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

டெல்டா என்ற குண்டு வெடித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை நாம் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்.

மக்களிடம் உண்மை நிலைவரத்தை தெரிவித்து , நாமனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை எதிர்கொண்டு எதிர்வரும் சில தினங்களுக்கு பாதுகாப்பாக இருந்தால் இந்த சலவாலை வெற்றி கொள்ள முடியும்.

இந்தியாவில் ஏற்பட்ட நிலைமையைப் போன்றே இங்கும் ஆரம்பமானது. எனினும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகலரும் இணைந்து அவ்வாறான நிலைமை ஏற்படாமல் கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10