சிவலிங்கம் சிவகுமாரன்
- சிறுவர்கள் தொடர்பான ஒருதேசிய கொள்கை எந்த அரசாங்கத்திடமும் இருந்ததில்லை
- சிறுவர் துஷ்பிரயோகம்குறித்த தேசிய ரீதியான தரவுகள் இல்லை
- முறைப்பாடுகள்,வழக்குகளில் எந்த முன்னேற்றங்களும் இல்லை
- விழிப்புணர்வுதிட்டங்களுக்கு மில்லியன் கணக்கில் செலவிட்டும் பயனில்லை
- தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபையின் பல பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை
- மேற்படி அதிகார சபைக்கு 6மாவட்டங்களில் மட்டுமே பிராந்திய காரியாலயங்கள் உள்ளன.
- தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபையின் தோல்வி என்பது அரசாங்கத்தினதும் தோல்வியாகவே பார்க்கப்படல்வேண்டும்
மேற்குறிப்பிட்ட தலைப்பில் கடந்த வாரம்ஒரு ஆங்கில நாளேடு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தது. இந்த தலைப்பின் கீழ்அண்மையில் பேசுபொருளாகியுள்ள டயகம ஹிஷாலினி என்ற சிறுமியின் விடயம் மட்டும்முக்கியத்துவம் பெறப்போவதில்லை, மாறாக நாவலப்பிட்டி பகுதியில் உறவினர்களாலேயேநீண்ட காலம் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி வந்த 13 வயது சிறுமி மற்றும் தலைநகரில்பலருக்கு இணையம் மூலம் விற்கப்பட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட கடந்த காலங்களில் இவ்வாறுதுஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இறுதி வரை நீதி கிடைக்காமலும் முற்று பெறாது தொடரும்சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உச்சபட்ச அதிகாரத்தில் கடந்த காலங்களில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள், மகளிர் விவகார அமைச்சர்கள், ஏன் நாட்டின் முதல் பெண்ஜனாதிபதியாலும் கூட நாட்டின் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான வலுவான ஒரு அமைப்பைஉருவாக்க முடியவில்லை.
இதற்கு அரசியல் சுயநலங்கள் அல்லது அக்கறையின்மையைமட்டும் சுட்டிக்காட்டி விட்டு அமைதியாக இருந்து விட முடியாது. தாம் தெரிவு செய்தபிரதிநிதிகளிடம் இன்று நவீன ஊடக சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்விஎழுப்பும் மக்கள் நேரடியாக ஏன் அது பற்றி அவர்களிடம் கதைப்பதில்லை என்ற கேள்விஎழுகின்றது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-28
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM