தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமையினால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூட்டு

Published By: J.G.Stephan

09 Aug, 2021 | 06:02 PM
image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்  ஆலய நிர்வாக உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகளவானோரை ஒன்று கூட்டியமை, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை பேணாமை மற்றும் அறிவுறுத்தல்களை மீறியமை ஆகிய குற்றங்களுக்காக இன்று மாவட்ட சுகாதார பகுதியினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான்  ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார்.

அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41