சாரதியை தாக்கி முச்சக்கர வண்டி கொள்ளை : ஒருவர் கைது

Published By: Digital Desk 4

09 Aug, 2021 | 12:02 PM
image

(எம்.மனோசித்ரா)

அநுராதபுரத்தில் சாரதியை தாக்கி முச்சக்கர வண்டியைக் கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கரவண்டியொன்றில் ஏறிய இருநபர்கள் அதன் சாரதியிடம் குறிப்பிட்ட இடமொன்றுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி , செல்லும் வழியில் சாரதியைத் தாக்கி முச்சகரவண்டியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவராவார். ஏனைய சந்தேநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03