புதையல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது

Published By: Gayathri

09 Aug, 2021 | 12:00 PM
image

(எம்.மனோசித்ரா)

உடவலவ மற்றும் பரசங்கஸ்வௌ ஆகிய பிரதேசங்களில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை உடவலவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உடவலவ, கடுவலை, மாவனெல்ல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். உடவலவ பொலிஸாரால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதே போன்று பரசங்கஸ்வெவ பிரதேசத்திலும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாரவில பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா கலக்கப்பட்ட மருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

'மோதக' எனக்குறிப்பிடப்படும் இந்த  மருந்தினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:06:39
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47