பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி

Published By: Vishnu

09 Aug, 2021 | 10:00 AM
image

ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார்.

பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார்.

லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.

அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார்.

"இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன சொல்ல முடியும் என்பதைப் பற்றி நான் நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன், உண்மை என்னவென்றால், என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை" 

"பல வருடங்களுக்குப் பிறகு இது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது" என்று மெஸ்ஸி செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

அத்துடன் என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு குட் பை சொல்வேன் என்று நினைத்துப்பார்ககவே இல்லை.

நீண்ட வருடங்களாக இந்த அணிக்காக விளையாடியுள்ளேன். எனக்கு வாழ்கையை தந்தது இந்த அணி. ஆனால் தற்போது விடை பெறுவது மிக கடினமாக உள்ளது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை

என் தலைமையில்  நிறைய விடயங்கள் நடந்துள்ளன. இந்த கிளப்பை விட்டு விலகும் நான் என் வாழ்க்கையை மாற்றும் யதார்த்தத்தை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் நாம் அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நான் அறிமுகமான நேரம், என் கனவு நனவாகியது, பின்னர் வந்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் தொடங்கிய அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன் என கூறினார்

கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்சிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

34 வயதான அவர் 21 ஆண்டுகளாக பார்சிலோனாவில் இருந்தார்.

ஆர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி  13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கிண்ணங்களை பெற்றுத் தந்துள்ளார்.

பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார்.

மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.

வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள் கூட்டத்தில் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11