முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீதான குண்டுத் தாக்குதல் விவகாரம்: மேன் முறையீட்டை வாபஸ் பெற்ற 2 ஆம் குற்றவாளி

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 06:32 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு நகர  மண்டப வளாகத்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டை குற்றவாளி ஒருவர் வாபஸ் பெற்றுள்ளார்.

 குறித்த வழக்கில் 2 ஆவது பிரதிவாதியாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றவாளியாக காணப்பட்ட  சக்திவேல் லங்கேஸ்வரன் என்பவரே, தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன் முறையீட்டை வாபஸ் பெற்றுள்ளார். தனது சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். பஞ்சாட்சரம் ஊடாக இது தொடர்பிலான விடயங்களை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு முன் வைத்து அவர் இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

 இந்நிலையில்,  சக்திவேல் லங்கேஸ்வரனின் மேன் முறையீட்டை தள்ளுபடி செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம்,  மேல் நீதிமன்றில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து  விதிக்கப்பட்ட 30 வருட சிறைத் தண்டனை, கடந்த 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் வகையில் கணக்கிடப்படும் என அறிவித்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58