இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் கடந்த மே மாதம் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை காசா முனை பகுதியில் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் முக்கிய இடங்களை தகர்த்தது.
இருதரப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று காசா பகுதியிலிருந்து பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக, அந்தப் பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஹமாஸ் இராணுவ வளாகம் ஒன்றிலும் அவா்களது ஏவுகணை குண்டுவீச்சு தளத்திலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
எனினும், இந்தத் தாக்குதலில் உயிசர்ச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இதுகுறித்து ஹமாஸ் தரப்பிலிருந்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM