(எம்.மனோசித்ரா)
சிறுவர்களை முறையற்ற வகையில் காண்பிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்த அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய 10 நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த 10 பேரையும் அடுத்த வாரத்திற்குள் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காணொளிகள் அல்லது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் உள்ள விசேட பிரிவு மற்றும் நவீன தொழிநுட்ப உபகரணங்கள் ஊடாக நாட்டில் எந்தவொரு பகுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்டவாறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எந்த முறைமையைப் பயன்படுத்தியேனும் சமூக வலைத்தளங்களில் சேகரிக்கப்படுமாயின் அந்த சந்தர்ப்பத்திலேயே அது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM