(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை கொவிட் தாக்கத்துக்கு மத்தியில் இரகசியமான முறையில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
தொழிற்சங்கத்தின் தலைவர்களை கைது செய்தாலும் ஒருபோதும் போராட்டத்தை கைவிட போவதில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து கொவிட் தாக்கத்துக்கு மத்தியில் வீதிக்கிறங்கி போராடும் நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே போராட்டத்தில் ஈடுப்பட்டோம். பாதுகாப்பு தரப்பினரே போராட்டத்தை அமைதியற்ற நிலைமையினை தோற்றுவித்தார்கள்.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு பொது மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே அரசாங்கம் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பதை பிற்போட்டுள்ளது.
கொவிட் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என் குறிப்பிட்டு. போராட்டங்களை முடக்கி சட்டமூலத்தை இரசியமான முறையில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.
தொழிற்சங்க தலைவர்களையும்,உறுப்பினர்களையும் கைது செய்வதால் மாத்திரம் ஒருபோதும் போராட்டத்தை கைவிட மாட்டோம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM