கைது செய்தாலும் ஒருபோதும் போராட்டத்தை கைவிட போவதில்லை - முன்னிலை சோசலிசக் கட்சி

Published By: T. Saranya

07 Aug, 2021 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை கொவிட் தாக்கத்துக்கு மத்தியில்  இரகசியமான முறையில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தொழிற்சங்கத்தின் தலைவர்களை கைது செய்தாலும்  ஒருபோதும் போராட்டத்தை கைவிட போவதில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர்  புபுது ஜாகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து கொவிட் தாக்கத்துக்கு மத்தியில் வீதிக்கிறங்கி போராடும் நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே போராட்டத்தில் ஈடுப்பட்டோம். பாதுகாப்பு தரப்பினரே போராட்டத்தை அமைதியற்ற நிலைமையினை தோற்றுவித்தார்கள்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு பொது மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே அரசாங்கம் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பதை பிற்போட்டுள்ளது.

கொவிட் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என் குறிப்பிட்டு.  போராட்டங்களை முடக்கி சட்டமூலத்தை இரசியமான முறையில் நிறைவேற்ற அரசாங்கம்  முயற்சிக்கிறது.

தொழிற்சங்க தலைவர்களையும்,உறுப்பினர்களையும் கைது செய்வதால் மாத்திரம் ஒருபோதும்  போராட்டத்தை கைவிட மாட்டோம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56