இயற்கையை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 3

07 Aug, 2021 | 10:56 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் இயற்கையையும் இயற்கைகளை வளங்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்பதுடன், காடழித்தல், மணல் கொள்ளையென இயற்கையை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் பதிலளிக்கையில்,

சுற்றாடலை பாதுகாக்க ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். 

கடந்தகாலத்தில் காடழித்தல் மற்றும் மணல் அகழ்த்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதிருந்தமையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தற்போது அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம்.

அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரம் மற்றும் ஏனைய தராதரங்களை பாராது இந்நடவடிக்கைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அதிகாரம் எமக்கு கிடைக்கப்பெற்றதால் இவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளோம். 

பலருக்கு தண்டனைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். மணல் அகழும் செயற்பாடுகளும் மணல் வெட்டும் நடவடிக்கைகளும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், நாட்டின் இயற்கை மற்றும் இயற்கை வளத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09