(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று நிலையில் பாரிய சேவையை மேற்கொள்ளும் சுவசெரிய சேவையை மேலும் விருத்தியடைச்செய்ய வேண்டும்.
அதற்காக மேலும் 212 அம்பியூலன்ஸ் வண்டிகள் தேவைப்படுகின்றன. அத்துடன் மேலும் பல தேவைகளுக்காக 11,843,700.000 மில்லியன் ரூபாவுக்கான அனுமதியை பாராளுமன்றத்தில் கோரி இருக்கின்றோம் என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
பாராமன்றத்தில் இன்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு 11,843,700.000 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தொற்றாளர்களை வைத்தியசாலைக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் கொண்டுசெல்ல பாரிய பங்களிப்பு செய்தது 1990 சுகசெரிய அம்பியூளன்ஸ் சேவையும் எமது அமைச்சுக்கு கீழே இருக்கின்றது.
தற்போது சுவசெரிய அம்பியூலன்ஸ்கள் 297 இருக்கின்றன. நாட்டின் தற்போதைய நிலையில் இது போதுமானதாக இல்லை. அதனால் மேலும் 212 அம்பியூலன்ஸ்கள் தேவைப்படுகின்றன. அதில் 60 அம்பியூலன்ஸ்களை ஜனாதிபதி கொவிட் நிதியத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
அதனால் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எமது ராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன.
அதனால்தான் குறைநிரப்பு பிரேரணையாக ஒருகோடியே 18இலட்சத்தி 43ஆயிரத்தி 700 ரூபாவுக்கான அனுமதியை பாராளுமன்றத்தில் கோரி இருக்கின்றோம் என்றார். இதேவேளை, விவாதத்தின் இறுதியில் பாராளுமன்றத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM