பயணிகளை தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக ஏற்றிச் சென்ற 11 சாரதிகள் கைது

Published By: Gayathri

05 Aug, 2021 | 01:07 PM
image

(எம்.மனோசித்ரா)

பொது போக்குவரத்துக்களில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றமை தொடர்பில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பில், தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக பயணிகளை ஏற்றிச் சென்ற 11 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொது போக்குவரத்துக்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக பெரும்பாலான பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்களால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை கொழும்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 11 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 11 பேரூந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் , மேல் மாகாண எல்லைப்பகுதிகளிலும், நாடளாவிய ரீதியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனவே தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, குறித்த பேரூந்துகளும் பொலிஸாரின் பொறுப்பிலெடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23