(எம்.மனோசித்ரா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட முற்பட்டால் நாடு என்ற ரீதியில் சர்வதேச மட்டத்தில் நேரடியான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
எனவே, செப்டெம்பரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் இப்போதிலிருந்தே அரசாங்கம் அவதானத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாயின், ஓரளவேனும் அதன் மூலம் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை மீதான நற்பெயர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நீக்கப்பட்டாலும் நீக்கப்படாவிட்டாலும் எவ்வித சிக்கலும் இல்லை என்று சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சர்வதேசத்திடமிருந்து கிடைக்கக் கூடிய சகல சலுகைகளையும் பெற்றுக் கொள்வதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். எனினும் தற்போதைய அரசாங்கம் எமக்குள்ள சலுகைகளையும் இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM