(எம்.மனோசித்ரா)
சமூக வலைத்தளங்கள் தொடர்பான அறிக்கையினை அடுத்தவாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதனையடுத்து அவற்றில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,' சிறுமி ஹிஷாலினியின் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமை' தொடர்பில் வினவப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
சம்பவமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கருத்துக்களை அல்லது நிலைப்பாடுகளை தெரிவிப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் சகலருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவே தான் இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சுக்குமிடையில் நீண்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் அல்லது இரு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை நாம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM