திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனாவால் முதல் நபர் உயிரிழப்பு 

Published By: T Yuwaraj

03 Aug, 2021 | 09:20 PM
image

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதல் முதலாக 60 வயதுடைய ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி. மோகனகாந்தன் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் பிரதேசத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பிரதேசத்தில் 1526 தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்து 200 பேர் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்; திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றினால் இதுவரை ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இருந்தபோதும் இன்று கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார். எனவே  தடுப்பூசி மூலம் தாக்கத்தை குறைக்கலாமே தவிர நோய் தொற்று ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது.   

எனவே நாங்கள் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என இறுமாப்புடன் தேவையற்ற விதத்தில்  தேவையற்ற ஒன்று கூடல் மற்றும் வீதியில் நடமாடுதல் களியாட்டங்கள் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதை தவிர்த்து தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை மிக  இறுக்கமான முறையில்  கடைப்பிடித்து எமது பிரதேசத்தை மீண்டு வழமையான நிலைமைக்கு கொண்டுவர  ஒத்துழைப்பு வழங்குமாறு  கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் "விஷம்...

2023-03-31 18:16:51
news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

நியூஸிலாந்துடனான தொடரில் தோல்வி அடைந்த இலங்கை...

2023-03-31 18:22:56
news-image

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து...

2023-03-31 18:23:10
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45