சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவை நம்புமளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை - விக்னேஸ்வரன்

Published By: Digital Desk 4

05 Aug, 2021 | 10:29 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

சிங்கள புத்திசாலி மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம், ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை.

அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

அரசாங்கம் யுத்தமொன்றை எதிர்பார்த்தா பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவு நிதி  ஒதுக்கியுள்ளது - விக்கினேஸ்வரன் | Virakesari.lk

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, எமது முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள புத்திசாலி சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.நாட்டின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளும் விதத்தில் கைகொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது அரசாங்கத்திற்கும், சிங்கள புத்திசாலி மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை, அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது.

எனவே சிங்கள புத்திசாலி மக்களை தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து மீள ஒரே வழிமுறையாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06