(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
சிங்கள புத்திசாலி மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம், ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை.
அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, எமது முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள புத்திசாலி சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.நாட்டின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளும் விதத்தில் கைகொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது அரசாங்கத்திற்கும், சிங்கள புத்திசாலி மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை, அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது.
எனவே சிங்கள புத்திசாலி மக்களை தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து மீள ஒரே வழிமுறையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM