இலங்கை தமி­ழர்கள் எவரும் தொடர்புபட்­டி­ருக்­க­வில்­லை ; பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க

Published By: Priyatharshan

07 Sep, 2016 | 10:51 AM
image

மலேஷியா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னிகர் இப்­ராஹிம் அன்ஸார் கோலா­லம்பூர் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து தாக்­கப்­பட்­ட­மையை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றேன். நாம் தமிழர் கட்­சியின் மலேஷிய கிளை­யி­னரே இந்த தாக்­கு­தலை மேற்­கொண்­டி­ருக்­கின்­றனர். இலங்கை தமி­ழர்கள் எவரும் இச் சம்­ப­வத்தில் தொடர்பு பட்­டி­ருக்­க­வில்­லை­யென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

மலே­ஷி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னிகர் அன்ஸார் கோலா­லம்பூர் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி.யான தினேஷ் குண­வர்­தன 23ஃ2 ஆம் இலக்க நிலை­யியற் கட்­ட­ளையின் கீழ் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கையிலேயே பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்இ குறித்த தாக்­குதல் சம்­ப­வத்தை

இலங்கை அர­சாங்கம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது. சம்­ப­வத்தை அடுத்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க நாம் செயற்­பட்­டி­ருந்தோம். வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சினால் இலங்­கைக்­கான மலே­சிய உயர்ஸ்­தா­னிகர் அழைக்­கப்­பட்டு சம்­பவம் தொடர்பில் அதி­ருப்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. நாம் தமிழர் கட்­சி­யி­னரே இந்த தாக்­குதல் சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­வர்கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது. இந்த கட்சி இந்­தி­யாவின் தமிழ் நாட்டில் இயங்கி வரு­கி­றது. இதன் கிளை­யான நாம் தமிழர் இயக்­க­மொன்று மலே­சி­யாவில் இருக்­கி­றது. இவர்­களே இந்த தாக்­கு­தலில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது. அதை­வி­டுத்து முன்னர் இலங்­கையில் இருந்­த­வர்­களோ அல்­லது தற்­போது இலங்­கையில் இருப்­ப­வர்­களோ அல்­லது இலங்கை பெற்­றோரை கொண்­ட­வர்­களோ இந்த தாக்­குதல் சம்­ப­வத்தில் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை. அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அனை­வரும் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த மலே­சிய தமி­ழர்­களே ஆவர். அவர்­களில் எவ­ரும் இலங்­கையர் கிடை­யாது.

நாம் தமிழர் கட்­சியின் மலே­சிய கிளைக்கு அந் நாட்டின் ஜனா­நா­யக செயல் கட்­சி­யுடன் தொடர்பு இருக்­கின்­றது. போர்க்­குற்­றங்­க­ளுக்­காக இலங்­கையை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­வ­தற்­காக தீர்­மா­ன­மொன்றை நிறை­வேற்­று­வ­தற்­காக மலே­சியா ஐ.நா. பாது­காப்பு சபையில் அங்­கத்­து­வத்தை பெற்று பரிந்து பேச வேண்டும் என்று அந்த கட்­சியின் இணை­யத்­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மலே­சி­யாவில் புலிகள் அமைப்பின் செயற்­பா­டுகள் பற்றி நாம் எப்­போதும் தேடியே வரு­கிறோம். நீங்கள் (கடந்த அர­சாங்கம்) ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்திக் கொண்ட கே.பி.யுடன் தான் புலி­களின் மலே­சிய கிளைக்கு தொடர்பு இருந்­தது. இவ்­வாறு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தல்­களை தீர்ப்­ப­தற்­காகத் தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்டு வரு­கிறார்.

அமைச்­சர்­கள் எம்.பி.க்கள் முன்னாள் ஜனா­தி­ப­திகள் மற்றும் பிர­த­மர்கள் வெளி­நாட்டு பய­ணங்­களை மேற்­கொள்ளும் போது வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சினால் தேவை­யான அனைத்து உத­வி உப­கார ஏற்­பா­டு­களும் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் எனி­னும் வெளி­நா­டொன்­றுக்கு சென்­றதன் பின்னர் அங்கு வழங்­கப்­ப­டக்­கூ­டிய பாது­காப்­புக்கு சம்­பந்­தப்­பட்ட நாட்டின் அர­சாங்­கமே பொறுப்­பாகும்.

செல்­வோ­ருக்கு வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் மூலம் தேவை­யான அனைத்து வச­தி­களும் செய்து கொடுக்­கப்­ப­டு­கின்­றன. எனி­னும் இன்­னு­மொரு நாட்­டுக்கு செல்லும் போது இங்­குள்ள பாது­காப்பு அதி­கா­ரி­களை கொண்டு அங்கு பாது­காப்பு வழங்க முடி­யாது. அப்­ப­டியே பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் இலங்­கையில் இருந்து சென்­றா­லுமே கூட அவர்­களால் பாது­காப்பு நட­வ­டிக்­கையின் நிமித்தம் ஆயு­தங்­களை எடுத்துச் செல்ல முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்த நிலை­யில் அவ­ருக்கு பாது­காப்பு வழங்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்­ன­வென்று கேட்­டால் அதற்­கான பதிலை மலே­சியா அர­சாங்­கமே வழங்க வேண்டும்.

எவ்­வா­றி­ருப்­பி­னும் மஹிந்த ராஜ­பக்ஷ மலே­சி­யாவில் முகம் கொடுக்க நேர்ந்த சம்­பவம் தொடர்பில் நாம் விசா­ரிக்­கிறோம். அவ­ருக்கு எந்த பாதிப்பும் ஏற்­பட நாம் இட­ம­ளிக்­க­மாட்டோம். மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கான் பாது­காப்பு தொடர்பில் அர­சாங்கம் கடப்­பட்­டுள்­ளது. பிரச்­சினை எதுவும் இருந்தால் தீர்ப்­ப­தற்கு நாம் தயா­ராக இருக்­கிறோம். எமது நாட்டில் இருந்து வெளி­நா­டொன்றுக் செல்லும் ஜனா­தி­ப­தி பிர­த­மர் அமைச்­சர்­கள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் என அனை­வ­ருக்கும் சம்­பந்­தப்­பட்ட நாட்­டி­னா­லேயே பாது­காப்பு வழங்­கப்­படும் என்றார்.

இதேவேளை புலிக் கொடியை ஏந்­தி­ய­வாறு மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக மலே­சி­யாவில் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­ட­தாக எழுப்­பப்­பட்ட விடயம் தொடர்பில் பதி­ல­ளித்த பிர­த­மர்இ அவ்­வா­றான செயற்­பா­டு­களை மலே­சிய அர­சினால் உட­ன­டி­யாக நிறுத்த முடி­யாமல் போயி­ருக்­கலாம் என்றும் இரத்தம் சிந்தும் நிலை­மை­களை தவிர்க்க அவ்­வா­றான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

இதே­நே­ரம் இலங்கை உயர்ஸ்­தா­னிகர் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் வருத்தம் தெரி­வித்து மலே­சிய அர­சாங்­கத்தின் சார்பில் அந்­நாட்டு வெளி­வி­வ­கார அமைச்­சினால் அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் அதி­கா­ரிகள் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­து­டன்இ குற்­ற­வா­ளிகள் சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள் என்றும் இனி­வரும் காலங்­களில் இம்­மா­தி­ரி­யான சம்­ப­வங்கள் இடம்­பெற வழி­வி­டாமல் இலங்­கை­யு­ட­னான உற­வு­களை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து மேலும் நெருங்கி செயற்­பட எதிர்­பார்ப்­ப­தா­கவும் மலே­சிய வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மலே­சி­யாவின் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் எமக்­கு­ரிய விட­ய­மல்ல. இந்த சம்­பவம் தொடர்பில் நாம் தேவை­யான சாட்­சி­யங்­க­ளையும் விப­ரங்­க­ளையும் வழங்கத் தயா­ராக இருக்­கிறோம்

ஆசிய அர­சியல் கட்­சி­களின் சர்­வ­தேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்­றி­ருந்த அமைச்சர் தயா கம­கே பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் தினேஷ் குண­வர்­தன எம்.பி. ஆகி­யோரை வழி­ய­னுப்பி வைக்க வந்­தி­ருந்த போதே இலங்கை உயர்ஸ்­தா­னிகர் கோலா­லம்பூர் விமான நிலை­யத்தில் வைத்து தாக்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­ப­வத்தின் போது மேற்­படி அதே மாநாட்டில் கலந்­து­கொள்ள சென்­றி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ அங்கு இருந்­தி­ருக்­க­வில்லை.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிவுற்றதும் என்ன நடந்தது என்பது தொடர்பில் முழுமையான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இதன்போது குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த பிரதி அமைச்சர் அனோமா கமகே கருத்து வெளியிடுகையில்இ மாநாடு நடைபெற்ற போதும் மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கு மலேசிய அரசாங்கத்தினால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாடு திரும்ப விமான நிலையம் வந்த போது மஹிந்த ராஜபக்ஷ உடன் வந்திருக்காமையினால் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உயர்ஸ்தானிகர் அக்கறைப்பட்டிருக்காமல் விட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள்உள்ளன என்றார். .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09