சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தற்போது ஒரு மாதத்தில் மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரவலை கண்டறிந்துள்ளது. 10 நாட்களில் 300 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
சீன முழுவதும் 15 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் காரணமாக சீன அரசாங்கத்திற்கு பரந்தளவிலான பரிசோதனை நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டியுள்ளது.
வைரஸ் பரவலுக்கு உருமாறிய டெல்டா வைரஸ் மற்றும் உள்நாட்டு சுற்றுலா காலம் கரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் செவ்வாய்க்கிழமை 90 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவற்றில் 61 பேர் உள் நாட்டு தொற்றாளர்கள் பதவாகியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணை குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை சீனாவில் வுஹான் நகரத்தில் அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு 7 உள்நாட்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவை ஒரு வருடத்திற்கும் மேலாக முதல் முறையாக பதிவான உள்நாட்டு தொற்றுக்கள் ஆகும்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வுஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் முதன்முதலாகப் பரவியதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டின் பெரும்பகுதியிலும் சீனா தனது எல்லைக்குள் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்தது.
இருப்பினும், மீண்டும் வைரஸ் பரவியமை சீனாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் நாஞ்சிங்கில் 9.2 மில்லியன் குடியிருப்பாளர்களை மூன்று முறை பரிசோதனை செய்து ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளனர்.
புதிய வைரஸ் பரவல் தலைநகர் பீஜிங்கையும் அடைந்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM