நாட்டில் படசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
கல்வியமைச்சரின் கூற்றுப்படி நேற்று காலை நிலவரப்படி மேல் மாகாணத்தில் 97% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊவா மகாணத்தில் 95%, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 84%, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 83%, வட மாகாணத்தில் 82%, கிழக்கு மாகாணம் 74% , சப்ரகமுவ மாகாணத்தில் 52% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் குறைந்தது முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகஸ்ட் இறுதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசிக்குப் பிறகு சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM