மிரட்டும் நான்காவது அலை

Published By: Gayathri

02 Aug, 2021 | 05:23 PM
image

சத்ரியன்

கொரோனாவையும், அதற்கான தடுப்பூசியையும், மையப்படுத்திய அரசியல் நகர்வுகள் தீவிரம் பெற்றிருக்கின்ற நிலையில், நான்காவது அலை பற்றிய அச்சமும் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது அலையின் இறுதியில் – நான்காவது அலையில் தொடக்க கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்று இலங்கை மருத்துவச் சங்கத்தின் தலைவர், மருத்துவர் பத்மா குணரத்ன செய்தியாளர்களிடம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதற்கு அடுத்தநாள், அதனை நிராகரித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

இன்னமும் மூன்றாவது  அலையில்தான் இருந்து கொண்டிருக்கிறோம், நான்காவது அலை பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்று அவர்கள் மறுத்திருந்தார்கள்.

ஆனால், அடுத்தடுத்த நாட்களிலேயே சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளான மருத்துவர்கள், அசேல குணவர்த்தனவும், ஹேமந்த ஹேரத்தும் டெல்டா பரவல் பற்றியும், அதிகரிக்கும் தொற்றுகள் குறித்தும் எச்சரிக்கைகளை விடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

டெல்டா தொற்று நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என்பது அவர்களின் ஆகப் பிந்திய கருத்து. 

டெல்டா என்பது முன்னைய கொரோனா தொற்றுகளை விட பல மடங்கு வீரியமும் தீவிரமாகப் பரவும் ஆற்றலும் கொண்டது.

டெல்டா தொற்று எல்லா மாவட்டங்களிலும் பரவியிருந்தால், அது இப்போது பல்கிப் பெருகியிருக்கும்.

ஆனால் மட்டுப்படுத்தப்பட்டளவு பிசிஆர் சோதனைகளே நடத்தப்பட்டு வருவதால், தொற்றாளர்களை கண்டுபிடிக்கப்படுவது குறைவாக இருக்கிறதே தவிர, முழு அளவில் பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டால் தான் உண்மையான நிலைவரம் தெரியவரும்.

மூன்றாவது அலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோலத் தான் நான்காவது அலை பற்றிய அச்சுறுத்தலும் உள்ளது.

இலங்கையைப் போலவே தான், கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவியது.

மே 12ஆம் திகதியில் இருந்து மே 29ஆம் திகதி வரையான காலம் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட தொற்றாளர்கள் பதிவாகினர். 

அந்தக் காலகட்டத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

மே 21ஆம் திகதி அதிகபட்சமாக 36 ஆயிரத்து 184 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07