எம்.எஸ்.தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்னன.
அத்தோடு, மரணித்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆயினும், ரிஷாத் பதியுதீனின் குடும்பத்தினர் சட்டத்தை வளைத்து, அதிலிருந்து தப்பிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால், இவ்விவகாரத்தில் ரிஷாத்; பதியுதீன் தரப்பினரால் சட்டத்தை வளைக்க முடியாது. ஏனெனில், ரிஷாத்; பதியுதீனே தனக்கு நீதி வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வாறு சட்டத்தை வளைக்க முடியும்? என்பது கேள்வியாகின்றது.
மேலும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கும், ரிஷாத் பதியுதீனுக்கும் இடையிலான உறவுகளின் நிலை எத்தகையது என்பதனை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அவர் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையல்ல. அதிகாரித்தில் இருப்பவரும் அல்ல. வெறும் மக்கள் பிரதிநிதி மட்டுமே.
ஹிஷாலினிக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரைக்கும் ஹிஷாலினி தற்கொலை செய்து கொண்டார் என்றோ அவர் கொலை செய்யப்பட்டார் என்றோ உறுதியாக கூற முடியாது.
இந்த விவகாரத்தில் பொது அமைப்புக்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதில் குற்றம் காண முடியாது.
சந்தேகத்தின் பேரில் ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தகப்பன், மனைவியின் சகோதரர், தரகர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.
ஹிஷாலினிக்கு நீதி வேண்டி மலையகக் கட்சிகளும் வீதிக்கு இறங்கியுள்ளன.
ஆனால், ஹிஷாலினி போன்ற மலையகப் பெண் பிள்ளைகளும், ஆண்பிள்ளைகள் பலரும் கல்வி கற்க வேண்டிய வயதில் பெற்றோர்களினால் வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள்.
இதற்குரிய காரணத்தை அடையாளம் காணவேண்டும். போதிய வருமானம் இல்லாததால்தான் இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை நியாயப்படுத்த முடியாது.
ஹிஷாலினிக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் கல்வி கற்கும் வயதுப் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று குரல் கொடுக்கவில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM