அகதி வீரர்களுக்கான அங்கீகாரமும் உலக நாடுகளின் மௌனமும்

Published By: Gayathri

01 Aug, 2021 | 05:17 PM
image

 சிவலிங்கம் சிவகுமாரன்

நாடில்லை, வீடில்லை, தமக்கென ஒரு தேசிய கீதமோ கொடிகளோ இல்லை. இப்படியானவர்கள் அகதிகள் என வரையறை செய்யப்படுகின்றனர். 

பல்வேறு காரணங்களுக்காக சொந்த நாட்டிலிருந்து வெளியேறுபவர்களை உலகின் பல நாடுகள் அகதிகளாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் அப்படியானவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் குழு. 

அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் ‘2020 ஒலிம்பிக்’ போட்டிகளில் இரண்டாவது தடவையாக பங்கேற்றுள்ளனர் அகதிகளாக உள்ள விளையாட்டு வீரர்கள். 

முதன் முதலாக இவ்வாறான அகதி வீரர்கள் 2016 ஆம் ஆண்டு பிரேசில் ரியோடி ஜெனீரோவில் இடம்பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், உலகம் முழுவதும் அகதிகளாக இருப்பவர்களின் அடையாளங்களாக பங்கேற்று சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை அழுத்தமாகக் கூறினர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட இவர்களை அகதி விளையாட்டு வீரர்கள் (Refugee athletes) என்றே குறிப்பிட்டது. 

இந்த நிகழ்வில் பத்து அகதி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பூகோள  ரீதியாக இன்று அகதிகளுக்கு உருவாகியுள்ள நெருக்கடிகளை வெளிப்படுத்தும் அதேவேளை, இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன? என்ற கேள்விகளை அனைவர் மனதிலும் எழுப்புவதாக அமைந்தது இவர்களது இந்த அதிரடி பிரவேசம்.

ஒலிம்பிக் கொடியை ஏந்தியவண்ணம் இவர்கள் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை பலரினதும் கவனத்தை ஈர்த்தது. 

கொங்கோ,தெற்கு சூடான், எதியோப்பியா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 ஆண்களும் 4 பெண்களும் இதில் கலந்து கொண்டனர். 

தற்போது டோக்கியோவில் ஆரம்பித்துள்ள 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அகதி  விளையாட்டு வீரர்கள் குழாமில் 29 பேர் இடம்பிடித்துள்ளனர். 

இவர்கள் சிரியா, தெற்கு சூடான், ஈரான், ஆப்கானிஸ்தான், எரித்ரியா, வெனிசுவேலா, கெமரூன், கொங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.  இவர்களில் 10 பேர் பெண்களாவர். 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என்பது ஒரு பூகோள அமைப்பாகும். விளையாட்டு மூலம் சிறந்ததோர் உலகை உருவாக்குதல் என்பதே இந்த அமைப்பின் தொலைநோக்காக உள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49