தமக்கு உரித்துடைய இடங்களைப் பாதுகாக்க நாட்டு பிரஜைகள் அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும்: சஜித்

Published By: J.G.Stephan

01 Aug, 2021 | 03:56 PM
image

(எம்.மனோசித்ரா)
அந்நிய செலாவணி இருப்பு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத  அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உரித்துடைய இடங்களை வெளிநாட்டு சக்திகளுக்கும், உள்நாட்டு தனவந்தர்களுக்கும் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. எனவே நாட்டு பிரஜைகள் அனைவரும் தமக்கு உரித்துடைய இடங்களைப் பாதுகாப்பதற்கு அச்சமின்றி அடிமை மனநிலையிலிருந்து விடுபட்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பலவந்தமாக மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கும் சகல அரச  அதிகாரிகளுக்கு எதிராகவும்  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில்  அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்துள்ளதால் அந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் முக்கிய இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. தற்போது எமது நாட்டில் இடம் விவகாரத்தில் சூது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாதாரண மக்களிடமிருந்து இடங்களைப் பெற்று அவற்றை தனவந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

2019 தேர்தலின் போது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதே போன்று தற்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருகின்றனர். எனவே நாட்டு மக்கள் அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். இங்கு யாரும் அடிமைகள் அல்ல. நாட்டு பிரஜைகளுக்கு சொந்தமான இடங்களை அவர்களிடமிருந்து பறிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதற்காக சட்ட ரீதியாக நாம் மக்களுடனிருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27