bestweb

தமக்கு உரித்துடைய இடங்களைப் பாதுகாக்க நாட்டு பிரஜைகள் அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும்: சஜித்

Published By: Digital Desk 8

01 Aug, 2021 | 03:56 PM
image

(எம்.மனோசித்ரா)
அந்நிய செலாவணி இருப்பு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத  அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உரித்துடைய இடங்களை வெளிநாட்டு சக்திகளுக்கும், உள்நாட்டு தனவந்தர்களுக்கும் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. எனவே நாட்டு பிரஜைகள் அனைவரும் தமக்கு உரித்துடைய இடங்களைப் பாதுகாப்பதற்கு அச்சமின்றி அடிமை மனநிலையிலிருந்து விடுபட்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பலவந்தமாக மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கும் சகல அரச  அதிகாரிகளுக்கு எதிராகவும்  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில்  அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்துள்ளதால் அந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் முக்கிய இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. தற்போது எமது நாட்டில் இடம் விவகாரத்தில் சூது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாதாரண மக்களிடமிருந்து இடங்களைப் பெற்று அவற்றை தனவந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

2019 தேர்தலின் போது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதே போன்று தற்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருகின்றனர். எனவே நாட்டு மக்கள் அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். இங்கு யாரும் அடிமைகள் அல்ல. நாட்டு பிரஜைகளுக்கு சொந்தமான இடங்களை அவர்களிடமிருந்து பறிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதற்காக சட்ட ரீதியாக நாம் மக்களுடனிருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-11 06:21:00
news-image

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்...

2025-07-11 06:17:24
news-image

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு,...

2025-07-11 05:43:42
news-image

வரி குறைக்கப்பட்டமைக்கான நிபந்தனைகளை வெளியிடுங்கள் ஐ.தே.க.பொதுச்...

2025-07-11 05:41:05
news-image

இந்திய ஒப்பந்தம்: பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும்...

2025-07-11 05:38:39
news-image

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு...

2025-07-11 05:35:23
news-image

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள்...

2025-07-11 05:32:38
news-image

ஜனாதிபதி, பிரதமர் பனிப்போரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;...

2025-07-11 05:17:30
news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07