குழந்தை மீது விழுந்த மின்விசிறி: பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!

Published By: J.G.Stephan

01 Aug, 2021 | 11:03 AM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பகுதியின் வீடொன்றிலிருந்து 3 வயது ஆண் குழந்தையின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 

காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாயல் வீதியில் உயிரிழந்த குழந்தையின், வீட்டிலிருந்தே  குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

முஹம்மத் ரிழ்வான் எனும் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குழந்தையின் தாய், குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது குழந்தை படுத்து கிடந்ததாகவும், குழந்தையின் மீது வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதையும் அவதானித்துள்ளார்.

மேலும், குழந்தையை எழுப்பிய போது, குழந்தை எழுப்பாத நிலையில், அயலவர்களின் உதவியுடன் குழந்தையை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்திசாலையில் தெரிவித்ததாக தெரியவருகின்றது.

குறித்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55