logo

தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்படமாட்டாது - அருந்திக பெர்னாண்டோ

Published By: T Yuwaraj

30 Jul, 2021 | 04:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படமாட்டாது. வரி குறைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.

தேசிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

State Minister Arundika Fernando tests COVID-19 positive | Daily News

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டுக்குள் தேங்காய் எண்ணெய் மாபியாக்கல் இடம் பெறுகின்றன.   எக்காரணிகளுக்காகவும்   தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கபடமாட்டாது. என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். தர குறைவான மற்றும் வரி குறைவான தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்படமாட்டாது.

தேசிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உரிய நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேங்காய் எண்ணெய் தொடர்பில் கடந்த காலங்களல் பாரிய சர்ச்சைகள் காணப்பட்டன. தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் இதுவரையில் காணப்பட்ட முறைகேடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

தேங்காய் எண்ணெயின் விலையினை குறைப்பதற்கும், தேங்காய் எண்ணெயின் ஆரோக்கியம் தொடர்பில் ஆராய்வதற்கும்  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற தேங்காய்  எண்ணெய் இறக்குமதி செய்யட்டால் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு தேவையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளன.

கிராமிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்பவர்களை ஊக்கவிக்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு மற்றும் நடுத்தர தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தெங்கு உற்பத்தி இராஜாங்க அமைச்சினாலும், கிராமிய சமுர்த்தி வங்கிகளின் ஊடாகவும் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26