24 பேருக்கு எகிப்து மரண தண்டனை

Published By: Vishnu

30 Jul, 2021 | 03:00 PM
image

இரண்டு தனித்தனியான சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் கொலைசெய்யப்பட்டதற்காக 24 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள டமன்ஹோர் குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் கடலோர பெஹீரா கவர்னரேட்டில் பொலிஸ் அதிகாரிகளை கொண்டு செல்லும் பஸ் மீது குண்டு வீசியதாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட குற்றங்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 8 பேர் ஆஜராகாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான எகிப்தில் பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

எனினும் இந்த தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50