ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தை விரிவுபடுத்தும் ஜப்பான்

Published By: Vishnu

30 Jul, 2021 | 02:24 PM
image

தலைநகர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வேளையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதானால், டோக்கியோவில் அமுலில் உள்ள அவசர நிலையை அண்டைய பகுதிகளுக்கும் மேற்கு நகரமான ஒசாகாவிற்கும் ஜப்பான் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தவுள்ளது.

சைட்டாமா, கனகாவா, சிபா மற்றும் ஒசாகா ஆகிய பகுதிகளை திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 31 வரை அவசரகாலச் சட்டத்தின் கீழ் வைக்கும் திட்டத்திற்கு ஒரு அரசு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டோக்கியோ மற்றும் தெற்கு தீவான ஒகினாவாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டமும் நீட்டிக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்புகளை ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். 

ஹொக்கைடோ, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா உட்பட மற்ற ஐந்து பகுதிகள் குறைவான அவசரக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்படும்.

டோக்கியோவில் வியாழக்கிழமை உட்பட கடந்த மூன்று நாட்களில் 3,865 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31