“கூட்டு எதிர் கட்சி மஹிந்தவுடன் கூடுகின்றது” தேர்தலுக்கான சின்னம் தீர்மானிக்கப்படலாம் ?

Published By: Robert

06 Sep, 2016 | 03:50 PM
image

உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது உட்பட பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை கூட்டு எதிர் கட்சியினர் கூடி கலந்துரையாட உள்ளனர். இதன் போது எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அறிவிக்க உள்ளதாக கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் கலந்துக் கொள்ளாதிருக்க கூட்டு எதிர்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு மலேஷியா சென்று நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் கூட்டு எதிர்கட்சி தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளனர். 

குறிப்பாக ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றதேர்தலை வைப்பதாக அரசாங்கம் தகவல்களை கசிய விட்டுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன்போது தனித்து போட்டியிடுவதற்கான சூழலை அமைத்தல் மற்றும் சின்ன குறித்து இரகசிய தன்மையை பேணுதல் போன்ற விடயங்கள் முக்கியமானதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பை கட்சி சம்மேளனத்தின் போது ஜனாதிபதி விடுத்த நிலையில் அதனை மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 

மேலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ முனின் இலங்கைக்கு விஜயத்தின் போது வழங்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் மலேஷியாவில் தாக்கப்பட்ட இலங்கை தூதுவரின் விவகாரங்கள் உள்ளிட்ட தேசிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளுதல் அதனூடாக மக்கள் அணித்திரட்டுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் வெள்ளிக்கிழமை சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54