“தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே பஸ்களில் பயணம் செய்ய முடியுமென அறிவிக்கவில்லை”
(இராஜதுரை ஹஷான்)
கொவிட் -19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என போக்குவரத்து திணைக்களம் இதுவரையில் அறிவிக்கவில்லை. பொது மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் குறித்த வழிகாட்டல் சுகாதார தரப்பினரால் நாளை வெளியிடப்படும் என போக்குவரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் எ.எச் பண்டுக தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை மீள ஆரம்பித்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்- 19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று சுகாதார தரப்பினரோ, போக்குவரத்து அமைச்சோ இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொவிட் வைரஸ் தொற்றாது என்று குறிப்பிடப்படவில்லை.
பொது மக்கள் தங்களின் சுயபாதுகாப்பை எந்நிலையிலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சுய பாதுகாப்பிற்கு சுகாதார தரப்பினர் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
நாளை மறுதினம் முதல் மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் தொடர்பிலான வழிகாட்டல் நாளை சுகாதார தரப்பினரால் வெளியிடப்படும்.
பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை காணமுடிகிறது. ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM