எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பை ஆராய விசேட குழு : ரணிலினால் பிரேரணை முன்வைப்பு

Published By: Digital Desk 4

29 Jul, 2021 | 06:04 AM
image

(ஆர்.யசி)

இலங்கை கடல் எல்லைக்குள் அண்மையில் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமையால் ஏற்பட்ட கடல் அனர்த்தம், அதனால்  வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை பரிசீலித்து தமது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை அமைக்க வேண்டுமென்ற பிரேரணையொன்று  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான  ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இது எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சபாநாயகரினால் இது குறித்த அறிவிப்பு விடப்படும்.

கடந்த யூன் 22 ஆம் திகதி கொழும்பு  கடற்பரப்பில் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமை இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் சுற்றுச்சூழல் அனர்த்தம் எனவும், இவ் அனர்த்தம் கடல்சார் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை அழித்துள்ளதுடன், நாட்டிற்கு பாரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியிருப்பதாலும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதே இந்தக் குழுவின் நோக்கம் எனவும் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால்  முன்வைத்துள்ள  பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12