“சிறுநீரக கல், உயர் குருதி அழுத்தம், சிறுநீரகத் தொற்று மற்றும் சர்க்கரை நோயால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்காக மேற்கொள்ளப்படும் சிறுநீர் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனையின் போது தான் இதன் பாதிப்பு தெரியவரும். தொடக்க நிலை பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவும் தெரியாது. பாதிப்பு அதிகரித்தவுடன் தான்
அறிகுறிகள் தோன்றும். கால்கள் வீக்கம், படபடப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றினாலும் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொண்டு மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். கிட்னி பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிறு குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை வரக்கூடும்’‘ என்று சிறுநீரகத்தின் பாதிப்பு குறித்து எச்சரிக்கையுடன் எம்மிடம் பேசத் தொடங்குகிறார் டொக்டர். T.V. விக்ரம் சாகர். இவர் இங்கிலாந்து நாட்டில் பயிற்சி பெற்று, மதுரையில் இயங்கி வரும் வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தற்போது சிறுநீரகவியல் துறையில் அனுபவமிக்க மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்யூட் கிட்னி இன்ஜுரி என்றால் என்ன? அதற்கான சிகிச்சை குறித்து..?
இதற்கு முன் சிறுநீரக பாதிப்பு ஏதும் இல்லாம லிருக்கும் போது, திடீரென்று உடலில் ஏற்படும் கட்டுப்ப டுத்த இயலாத வாந்தி மற்றும் பேதியின் காரணமாகக் கூட கிட்னி பாதிக்கப்படலாம். சிறுநீரகத் தொற்று இருந்தால் கூட இவை உருவாகக்கூடும். சில தருணங்களில் சிலருக்கு சில காரணங்களால் சாப் பிடும் மாத்திரைகளால் கூட இவை தோன்றக்கூடும். கல் அடைப்பு ஏற்பட்டிருதாலும் இம்மாதிரியான கிட்னி பாதிப்பு ஏற்படும்.
கிட்னி பயாப்சி எடுத்து சோதித்து இதற்குரிய சிகிச்சையளிக்க இயலும். இதனை அலட்சியப்படுத்தினால் தான் கிரானிக் கிட்னி டிஸீஸ் வரும். அதனை குணப்படுத்துவது கடினம். ஆனால், டயாலிஸஸ் மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம்.
லுபஸ் நோயால் கிட்னி பாதிப்பிற்குள்ளாகும் என்கிறார்களே இதற்கான விளக்கமும், சிகிச்சையும் குறித்து..?
லூபஸ் என்ற நோயாலும் கிட்னி பாதிக் கப்படலாம். ரூமடாய்ட் நோயினாலும் கிட்னி பாதிக்கப்படலாம். எம்முடைய உடலை பாதுகாக்கும் நோயெதிர்ப்பு சக்தியுடைய செல்களின் செயல்பாட்டில் நடைபெறும் சிறிய கோளாறுகளே லூபஸ் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஓடடோ இம்யூன் டிஸ்ஒர்டர் என்றும் இதனை குறிப்பிடலாம். இதனை நாங்கள் லூபஸ் நெஃப்ரடீஸ் என்று குறிப்பிடுகிறோம். இதனால் உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக கிட்னி பாதிக்கப்படும் போது அவ்வகையான நோயாளிகள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். இது அனைத்து வயதினருக்கும் வரும் என்றாலும் 20 முதல் 45 வயதினரையே அதிகம் தாக்குகிறது என்றும், அதிலும் பெண்களை அதிகம் தாக்குகிறது என்றும் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு தொடர் சிகிச்சை எடுத்தால் குணப்படுத்திட இயலும்.
மக்கள் ஏன் கிட்னி பாதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை?
ஏனெனில் இதற்கான அறிகுறிகள் உட னடியாகவும், வெளிப்படையாகவும் தெரிய வருவதில்லை. இதயத்தில் ஏதேனும் ஒரு சிறிய பாதிப்பு என்றாலும் கூட இதயப்பகுதியில் ஒரு சிறிய வலி அறிகுறியாக ஏற்படுகிறது. இதற்கு பயந்து உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவார்கள். ஆனால் கிட்னியைப் பொறுத்தவரை, சிறுநீரகத்தில் கிரியாட்டீன் அளவு ஓர் எல்லைக்கு மேல்அதிகரித்தால் தான் அதன் பாதிப்பு தெரியவரும். அதேப் போல் சிறுநீர் பிரிவதில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் தான் மருத்துவர்களை சந்திப்பார்கள். அது வரை பாதிப்புடனேயே மக்கள் இருக்கிறார்கள். மக்களை பயமுறுத்துவதற்காக இதனை சொல்ல வில்லை. இருந்தாலும், ஒரு எச்சரிக்கைக்காக சொல்கிறேன். டயலாலிஸஸ் செய்யும் நோயாளிகள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதத்தினருக்குமேல் மரணத்தை சந்திக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தோமானால் புற்றுநோயை விட மரணத்தை நோக்கி வேகமாக பயணிக்கிற ஒரு நோயாகத்தான் கிட்னி பாதிப்பை மருத்துவ துறை பார்க்கிறது.
அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படும். இது உண்மையா?
ஒருவர் தனக்கு தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் அதனால் கிட்னியின் செயல்பாட்டில் எந்தவித பாதிப்பும் அதிகளவில் ஏற்படுவதில்லை. ஆனால் சிறுநீரகத்தில் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்து நீங்கள் அதிகமாக தண்ணீர் அருந்தினால் அதன் போது ஏதேனும் பாதிப்பு அதிகரிப்பதற்கு வாய்ப் புண்டு. அதன் காரணமாகவே கை கால் வீக்கம், மூச்சு திணறல் போன்றவை தோன்றும்.
சிறுநீரக தொற்று தற்போது அதிகரித்துள்ளது என்றும், அதிலும் குறிப்பாக பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்களே இதற்கான மருத்துவ விளக்கம் என்ன?
சிறுநீரக தொற்று உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் போது அந்த சுற்றுப் புறத்தில் தூய்மையில்லாதிருந்தாலும் இவை ஏற்படக்கூடும். காய்ச்சல், சிறுநீர் பிரியும் பாதையில் எரிச்சல், அசௌகரியம், குறைவாகவோ அல்லது இரத்தம் கலந்தே பிரிவது போன்ற பல அறிகுறிகள் சிறுநீரகத் தொற்றால் ஏற்படக்கூடியவை. இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது தான் நல்லது.
டயாபடீஸால் ஏற்படும் கிட்னி பாதிப்பு குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்?
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயால் கிட்னி பாதிக்கப்படுவது உண்மை. இதனை யாரும் மறுக்க இயலாது. அதனால் தான் ஒவ் வொரு முறையும் வலியுறுத்திச் சொல்கிறோம். டயாபடீஸ் வந்துவிட்டால் அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
அத்துடன் நில்லாது ஆண்டுதோறும் சிறுநீரக பரிசோதனையை செய்து கொள்ளவேண்டும். அதே போல குருதி அழுத்தம் குறித்த எச்சரிக் கையுடனும் இருக்கவேண்டும். இவர்கள் தங்களது சிறுநீரில் புரதம் அதிகமாக வெளி யேறினால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த புரதம் குறித்த பரிசோதனையை அரு கிலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
முழுக்க முழுக்க வேறு வகையான இரத்த பிரிவு இருந்தாலும் தற்போது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியடைவதன் பின்னணி குறித்து..?
மருத்துவ ஆய்வின் முன்னேற்றத்தையே இது காட்டுகிறது. இது போன்ற மாற்று இரத்த பிரிவுள்ள சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு முன் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் அளவை கட்டுப்படுத்துவதும், புதிதாக பொருத்தப்படவிருக்கும் சிறுநீரகத்தை உடல் ஏற்கும் அளவிற்கு அதற்கான முன் தயாரிப்பும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகர மாக செயல்பட்டு வருகிறது.
சிறுநீரக பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காத்து கொள்வது எப்படி?
இதற்கென தனியாக எந்தவொரு நட வடிக்கையும் இல்லை. ஏனெனில் இவை உடல் இயக்கத்தின் அடிப்படையான உறுப்பு. அத் துடன் உடலில் எந்த பகுதியில் பாதிப்பு வந்தாலும் அதனை உடனடியாக கவனித்து சீரமைத்துக் கொள்ளவேண்டும். அதனை அலட்சியப்படுத்தினால் அதனால் கூட சிறு நீரகம் பாதிக்கப்படலாம். அதனால் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்தவேண்டும். சரிசமவிகித சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாமல் இயங்குதல் ஆகியவற்றை சீராக வைத்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு வராது. மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந் தால் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 7708820463 மற்றும் மின்னஞ்சல் முகவரி vikramsagartv@gmail.com
சந்திப்பு:- பரத்
தொகுப்பு:- அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM