டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
இலங்கையின் அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க இன்று டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிப் பிரிவில் 100 மீற்றர் ப்ரீஸ்டைலில் போட்டியிடுகிறார்.
இந்த நிகழ்வில் ஒன்பது பூர்வாங்க சுற்று போட்டிகள் இடம்பெறும், 71 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள். இந்த ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் முதல் 16 வீரர்கள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அமெரிக்காவில் பிறந்து அங்கு நீண்ட காலமாக பயிற்சி பெற்ற மெத்தியூ இலங்கைக்கான சர்வதேச அரங்கில் நுழைந்து தற்போது ஒன்பது தேசிய நீச்சல் சாதனைகளை படைத்த சிறந்த இலங்கை நீச்சல் வீரராக வலம் வருகின்றார்.
அசாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக ஏழு தங்கப் பதக்கங்களை வென்றார் மெத்தியூ.
ரியோ ஒலிம்பிக் உட்பட பல முக்கிய நிகழ்வுகளிலும் அவர் போட்டியிட்டுள்ளார். உலக நீச்சல் சம்பியன்ஷிப்பிற்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையையும் மெத்தியூ அபேசிங்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் வீராங்கனை அனிகா கபூர் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை தெஹானி எகொடவெல ஆகியோர் டோக்கியோ கிராமத்தை விட்டு வெளியேறினர்.
அனிகா மலேசியாவின் கோலாலம்பூருக்கு பறந்தார், தெஹானி இலங்கைக்கு புறப்பட்டார். 10 மீற்றர் ஏயார் ரைபிள் போட்டியில் பங்கேற்ற தெஹானி எகொடவெல 50 இல் 49 ஆவது இடத்தையும், 100 மீற்றர் பட்டர்ஃபிளை போட்டியில் பங்கேற்ற அனிகா கபூர் 33 விளையாட்டு வீரர்களில் 32 ஆவது இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM